உள்ளூர் செய்திகள்
கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
செல்போனில் பேசியதை கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை வெள்ளலூர் அருகே உள்ள சாய் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 14).இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா 3-வது அலை காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்ரீ லட்சுமி ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக பெற்றோர் புதிதாக செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். இதன் மூலமாக அவர் ஆன்லைனில் பாடம் படித்து வந்தார்.
மேலும் அந்த செல்போன் மூலமாக அடிக்கடி யாருடனோ பேசி கொண்டு இருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் ஸ்ரீ லட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.சம்பவத்தன்று இவரது தந்தை வெளியே சென்று இருந்தார்.
தாய் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் இருந்த ஸ்ரீ லட்சுமி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஸ்ரீ லட்சுமி தூக்கு போட்டு தொங்கினார். வீட்டிற்கு திரும்பிய அவரது தந்தை தனது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை தூக்கு கயிற்றில் இருந்து மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீ லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.