உள்ளூர் செய்திகள்
டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Published On 2022-01-19 10:22 GMT   |   Update On 2022-01-19 10:22 GMT
மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரபணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மற்றும் கொசுக்கள் உற்பத்திக்கான காரணிகளை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர்.  

இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை இன்று ஆய்வு செய்தார். திருப்பூர் பத்மாவதிபுரம் ஏ.வி.பி.லே அவுட் மற்றும் 4-வது வீதி ஆகிய இடங்களில்வீடு வீடாக சென்று  தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விளக்கமளித்தார். 

மேலும் திருப்பூர் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 4 கொரோனா பரிசோதனை மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி நகர் நல அதிகாரி பிரதீப் மற்றும் பலர் உடனிருந்தனர்
Tags:    

Similar News