உள்ளூர் செய்திகள்
சிப்பின்ஸ்

கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டு வாலிபர் கைது

Published On 2022-01-19 10:16 GMT   |   Update On 2022-01-19 10:16 GMT
சட்டவிரோதமாக தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்
கோவை:

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி முன்பு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு  வாலிபர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டைச்சேர்ந்த சிப்பின்ஸ் (வயது 32) என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்திருப்பதும்,  விசா முடிந்து 6 வருடங்களாக கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. 

இவர் கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்து உள்ளார். இவரிடம் இருந்து போலீசார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News