உள்ளூர் செய்திகள்
மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது.
இந்த கோவிலில் தைப்பூச பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு கடந்த 9-ந்தேதி
மகாலிங்க சுவாமி கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 8-ம் நாள் வரை ஒவ்வொரு வாகனத்தில் மகாலிங்க
சுவாமி காட்சியளித்தார். இந்நிலையில் 9-ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் அதிகாலை நடைபெற்றது.
தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரியையொட்டி
காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளினார்.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் தைப்பூசத் தீர்த்தவாரி
நடைபெற்றது. இரவு வெள்ளிரதக் காட்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.