உள்ளூர் செய்திகள்
ஒன்றிய அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி குடியரசு தின நிகழ்ச்சியில், தமிழகத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாலகங்காதர திலகர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்ற தலைவர்கள் படம் பொருந்திய அலங்கார வாகனங்களுக்கு அனுமதி மறுக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், மாரிமுத்து எம்.எல்.ஏ, ஐ.வி.நாகராஜன், அ.பாஸ்கர் ஒன்றியக்குழு தலைவர், வி.த.செல்வன் வி.சி.க., அய்யப்பன், தி.க. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்
300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.