உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பைக் விபத்தில் பள்ளி மாணவன் சாவு

Published On 2022-01-19 08:45 GMT   |   Update On 2022-01-19 08:45 GMT
ஆம்பூர் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் பைக் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:

வாணியம்பாடி அடுத்த வீரணமலை அருகே உள்ள மாத கடப்பா பகுதியை சேர்ந்த ராமாயிலு மகன் திலீப் குமார் (வயது14). அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகன் ஸ்ரீகாந்த் (14) பள்ளி மாணவன்.

நேற்று 2 பேரும் பைக்கில் பச்சகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றனர். அப்போது மேம்பால சுற்று சுவர் மீது பைக் மோதியது.

30 அடி ஆழத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த தீபக்குமாரை  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீகாந்த் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News