உள்ளூர் செய்திகள்
உடைக்கப்பட்ட உண்டியலை படத்தில் காணலாம்

நாகர்கோவில் அருகே நெல்வேலி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உண்டியல் கொள்ளை

Published On 2022-01-19 08:32 GMT   |   Update On 2022-01-19 08:32 GMT
நாகர்கோவில் அருகே நெல்வேலி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் அடுத்த நெல்வேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை பூஜை நடைபெறும். விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று மாலை பூஜை முடிந்தபின்பு பூசாரி கோவில் நடை அடைத்து விட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் கோவிலுக்கு சென்றபோது கோவிலில் முன்பிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக உண்டியல் திறக்கப்படவில்லை ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருக்கும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து ஆலய துணைத்தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News