உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 29,547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28,862 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 172 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 29,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28,862 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரே நாளில் 57 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றனர். தற்போது 289 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 281 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.