உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

நாகர்கோவில் அருகே கல்லறை தோட்டத்தில் கோஷ்டி மோதல்,4 பேர் காயம்

Published On 2022-01-19 07:53 GMT   |   Update On 2022-01-19 07:53 GMT
நாகர்கோவில் அருகே கல்லறை தோட்டத்தில் கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்:

கருங்கல் அருகே உள்ள அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் பிரவின் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது உறவினர்களுடன் எட்டணி சிறுகாட்டு விளையில் உள்ள தனது தாத்தா செல்லக்கண் கல்லறைக்கு மெழுகுதிரி ஏற்றிவைக்க சென்று உள்ளார்.

அப்போது அங்கு வந்த இவரது உறவினர்களான எட்டணியை சேர்ந்த வில்சன் மகன் லிபின் என்ற விஜில்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

இதில் விஜில்குமார், அவரது தாயார் விஜயா மற்றும் 2 பேர் சேர்ந்து தாக்கியதில் பிரவின் மற்றும் அவரது உறவினர் காஞ்சிரங்காட்டுவிளையை சேர்ந்த சௌந்தர்ராஜ் மகன் சுனில்ராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

அதேபோல சிறுகாட்டுவிளையை சேர்ந்த செல்லத்துரை மனைவி லில்லி மற்றும் பிரவீன், சுனில்ராஜ் ஆகியோர் தாக்கியதில் விஜில்குமார் மற்றும் அவரது தம்பி பெர்லின் பபிரோவும் காயமடைந்தனர்.

காயமுற்ற பிரவீன், சுனில்ராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், விஜில்குமார், பெப்லின் பபிரோ குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இது சம்பந்தமாக பிரவீன் மற்றும் விஜயா ஆகியோர் அளித்த புகார்களின்பேரில் கருங்கல் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News