உள்ளூர் செய்திகள்
சேவூர் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
பிரதான சாலையோரம் மின்வாரிய அலுவலகம் செயல்படுவதால் மக்கள் சுலபமாக மின்சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும்.
அவினாசி:
அவிநாசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட 8,500 மின் நுகர்வோரை உள்ளடக்கி சேவூர் தெற்கு பகுதியில் கடந்த 12 ஆண்டாக சிறிய கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இட நெருக்கடிக்கு இடையே செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் தற்போது பிரதான சாலையில் விசாலமான வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முறியாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவிகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உதவி மின்பொறியாளர் பழனிசாமி, முன்னிலை வகித்தார். பிரதான சாலையோரம் மின்வாரிய அலுவலகம் செயல்படுவதால் மக்கள் சுலபமாக மின்சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.