உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மின்கம்பங்களால் உடுமலையில் சாலை விரிவாக்க பணியில் தொய்வு

Published On 2022-01-19 06:51 GMT   |   Update On 2022-01-19 06:51 GMT
பொள்ளாச்சி சாலையில் பிரதான வணிகக்கடைகள் நிறைந்த பகுதியில் இரு மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது.
உடுமலை:

உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கம் மற்றும் வட்டச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி - பழநி ரோடு, தளி மற்றும் ராஜேந்திரா சாலையில் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டன.

இதேபோல் விரிவாக்கத்துக்கு இடையூறாக பல இடங்களில் மின் கம்பங்கள் இருந்த நிலையில் அவைகளும் அகற்றி மாற்றியமைக்கப்படுகின்றன.

அவ்வகையில் பொள்ளாச்சி சாலையில் பிரதான வணிகக்கடைகள் நிறைந்த பகுதியில் இரு மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மட்டும் சாலை விரிவாக்கப்பணி தடைபட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறுகையில்:

பிரதான சாலையில் விரிவாக்கப்பணி தடைபட்டுள்ளது. அங்குள்ள இரு மின்கம்பங்கள் இதுவரை அகற்றி மாற்றியமைக்கப்படவில்லை. இதனால் சாலையை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன . 

போக்குவரத்து பாதிக்கிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள மின்கம்பங்களை விரைந்து அகற்றி மாற்றியமைப்பதுடன் சாலை விரிவாக்கம் செய்ய துறை ரீதியான அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News