உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட இளம்பெண் உள்பட 5 பேரை காணலாம்

கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது

Published On 2022-01-19 04:35 GMT   |   Update On 2022-01-19 04:35 GMT
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:

தமிழக - கேரள எல்லையான குமுளியில் கேரள கலால்துறை உதவி ஆய்வாளர் பினீஷ்சுகுமாறன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பின்தொடர்ந்து குமுளி அருகே 63ம் மைல் பகுதியில் காரை சுற்றி வளைத்தனர். காரில் பெண் உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்ணுக்கு பின் முரணாக தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்டதில் மெத்திலினெடியோக்சி மெதம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காரில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜின் (29), நிதீஷ் (28), கிரண் (29), பிரசோப்பிரேம் (27), டைனா (22) ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிடிபட்ட போதைப்பொருள் சர்வதேச அளவில் 1 கிலோ ரூ.2½ கோடி வரை விலை உள்ளது. போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து எல்லைப் பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



Tags:    

Similar News