உள்ளூர் செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2022-01-19 03:41 GMT   |   Update On 2022-01-19 03:41 GMT
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை சோதனை செய்ய முயன்றபோது அதில் வந்த 3 பேரும் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அவற்றையும், கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருநின்றவூர் கன்னட பாளையத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 39), பாகல்மேடு பெரிய காலனியை சேர்ந்த சுந்தர்ராஜன் (48) மற்றும் வடமதுரை படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. சுரேஷ்பாபு மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News