உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 854 பேர் பாதிப்பு

Published On 2022-01-19 03:35 GMT   |   Update On 2022-01-19 03:35 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,883 பேர் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 854 பேர் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 664 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,854 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,883 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News