உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

ஓரணியில் இணைக்கும் திருநாள்- டாக்டர் ராமதாஸ் தைப்பூச வாழ்த்து

Published On 2022-01-18 06:54 GMT   |   Update On 2022-01-18 06:54 GMT
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைப்பூசத்தை முன்னிட்டு டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலா பருவமும் ஒன்றாக வரும் திருநாள் தைப்பூசம். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது.

தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென் ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் தமிழர்கள் தைப்பூசம் திருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News