உள்ளூர் செய்திகள்
நெல்லையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
பாளை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
பாளை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து தனிப் படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். நேற்று இரவு வ.உ.சி. மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தார்.இதே போல் வடக்கு பைபாஸ் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளிலும் கஞ்சா விற்ற 2 பேரை பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம், பாளை இலந்தகுளத்தை சேர்ந்த ஆண்டனி, ஆகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.