உள்ளூர் செய்திகள்
கைது

திருவொற்றியூர் அருகே ரவுடிக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது

Published On 2022-01-18 04:35 GMT   |   Update On 2022-01-18 04:35 GMT
திருவொற்றியூர் அருகே ரவுடிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்தவர் அஸ்வின்குமார் (வயது 22). ரவுடியான இவர், நேற்று முன்தினம் இரவு சிங்காரவேலன் நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்ற ஜஸ்டின் (24), சரவணன் (24) ஆகியோர் கத்தியால் அஸ்வின்குமாரின் தலை, முதுகு மற்றும் தோள்பட்டையில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ராகேஷ், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News