உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வட கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-01-18 04:24 GMT   |   Update On 2022-01-18 04:24 GMT
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரிரு இடங்களில் மிதமானது முதல் லேசானது வரையில் இன்று மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மழைப்பொழிவுக்கு வெப்பச்சலனம் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது என்ற அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News