உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
விழுப்புரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள திருநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் முருகன்(வயது 46). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவரது மனைவி வீரம்மாளுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முருகன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.