உள்ளூர் செய்திகள்
எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா

மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம்- சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா சபதம்

Published On 2022-01-17 09:10 GMT   |   Update On 2022-01-17 09:10 GMT
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழை என்றும் காப்போம் என்றும் தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என்றும் சசிகலா கூறினார்.
சென்னை:

மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், படங்களை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்கள். அவர் நடித்த சினிமா பட பாடல்களையும் ஒலிபரப்பினார்கள்.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் சசிகலா தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

அவர் மாலை அணிவிக்க வந்தபோது மழை கொட்டியது. அதை பொருட்படுத்தாது மழையில் நனைந்தபடியே மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழை என்றும் காப்போம். அவரது பிறந்தநாளான இன்று தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என்றார்.

வழக்கமாக சசிகலாவுடன் டி.டி.வி. தினகரனும் வருவார். ஆனால் இன்று அவரது வீட்டிலேயே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News