உள்ளூர் செய்திகள்
முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-15 16:33 GMT   |   Update On 2022-01-15 16:33 GMT
புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைளை புதுச்சேரி அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தொற்று எண்ணிக்கையோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான நாராயணசாமிக்கு கொரோன பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News