உள்ளூர் செய்திகள்
மாயம்

திருக்கோவிலூர் பகுதியில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2022-01-15 10:41 GMT   |   Update On 2022-01-15 10:41 GMT
திருக்கோவிலூர் பகுதியில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகள் ரேணுகா (வயது 23). இவர் சம்பவத்தன்று மணம்பூண்டி கிராமம் வரை சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து அவரது தாய் அஞ்சுகம் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ரேணுகாவை தேடிவருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

அதேபோல் மணலூர் பேட்டை போலீஸ் சரகம் அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் சிவ ஜோதி (17). இவர் வீட்டில் தூங்கிய போது திடீர் என மாயமானார்.

இதுகுறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன சிவஜோதியை தேடிவருகின்றனர்.

அதேபோல் திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்பிரபாகரன் மகள் டெல்பிஜெஸ்டினாமேரி (22) நர்சிங் படித்துவிட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரையும் காணவில்லை.

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் புகாரின் பேரில் வழக்கு செய்தனர். என்றாலும் 3 இளம்பெண்களும் எங்கு சென்றார்கள்? கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News