உள்ளூர் செய்திகள்
விசாரணை

கண்டாச்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் மோசடி குறித்து அதிகாரி நேரில் விசாரணை

Published On 2022-01-12 10:48 GMT   |   Update On 2022-01-12 10:48 GMT
திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் என்பவர் பெயரில் நகை கடன் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.

விசாரணை அறிக்கையை திருக்கோவிலூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். விசாரணை குறித்தான தகவல் குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என கூறிவிட்டார்.


Tags:    

Similar News