உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்:
பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு நடந்த சம்பவத்தை கண்டித்து தாராபுரம் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மாவட்டத் தலைவர் சுகுமார் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் யோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.