உள்ளூர் செய்திகள்
சேலத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
சேலத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு மெயின் ரோடு பல்ராம்செட்டியார் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 35). இவர் கடந்த ஆண்டு சிந்துஜா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ராஜீவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த ராஜி திடீரென வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.