உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரசு பஸ்சை அடித்து நொறுக்குவேன் என மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-01-11 09:08 GMT   |   Update On 2022-01-11 09:08 GMT
ஜோலார்பேட்டையில் அரசு பஸ்சை அடித்து நொறுக்குவேன் என மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
ஜோலார்பேட்டை:

அரசு பஸ்சை அடித்து நொறுக்குவேன் என மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது சந்தைக் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்களை அடித்து நொறுக்கு வேன் என கூறி கூச்சல் போட்டார். 

அந்த வாலிபரை பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஜோலார்பேட்டை சந்தைக் கோடியூர் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் காந்திராஜன் (வயது 26) என தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News