உள்ளூர் செய்திகள்
நெரிசலை குறைக்க போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை

Published On 2022-01-10 10:55 GMT   |   Update On 2022-01-10 10:55 GMT
தென்காசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி புதிய மாவட்டமாக உருவாகியதில் இருந்து தென்காசி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும், போக்குவரத்தினை சீர்படுத்தும் விதமாகவும் தென்காசி போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போக்குவரத்து காவல் துறையினர் தென்காசியின் முக்கிய பகுதிகளான யானை பாலம், நடு பல்க், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் சீரமைப்பு பணி செய்தனர். 

அங்கு வாகனங்கள் சிக்னலில் சீராக நிற்கும் விதமாக வெள்ளை நிற கோடுகள் வரைந்தும், இரவு நேரங்களில் விபத்தினை தவிர்க்கும் விதமாக ஒளிரும் அட்டைகள் பொருத்தியும் சாலையை சரி செய்து வருகின்றனர்.

 மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய விபத்து பகுதிகளில் விபத்தினை தவிர்க்கும் விதமாக ஒளிரும் விளக்கு களையும் பொருத்தி உள்ளனர்.
Tags:    

Similar News