உள்ளூர் செய்திகள்
பணம் வாங்க மறுத்த குன்னத்தூர் மூதாட்டி - சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
முத்தாள் குள்ளமாக இருப்பதால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை.
குன்னத்தூர்:
குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்தாள் (வயது 65) . இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் குள்ளமாக இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. இவருடன் பிறந்தவர்கள் 8 அக்கா, 3 அண்ணன். 3 அண்ணனும் ஒரு அக்காவும் இறந்துவிட்டனர். ஒரு அக்கா மட்டும் உள்ளூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் .
மற்ற அனைவரும் வெளியூரில் உள்ளார்கள். உள்ளூரில் இருக்கும் அக்கா வீட்டில் மட்டுமே முத்தாள் தங்குவது வழக்கம். மேலும் இவருக்கு முதியோர் உதவித்தொகை அரசு மூலம் வந்து கொண்டுள்ளது. முத்தாள் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு வாசல் கூட்டி சாணி தெளிப்பது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் அவர்கள் கொடுக்கும் உணவையும் வாங்கி சாப்பிட்டு கொள்வார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் முத்தாளை வழியில் பார்த்த அப்பகுதி வெளிமாநில வாசிகள், முத்தாளின் பரிதாப நிலையை பார்த்து அவருக்கு பணம் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் முத்தாள் அந்த ஏழ்மை நிலையிலும் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.