உள்ளூர் செய்திகள்
பனை விதைகள் முளைத்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
குன்னத்தூர் பனை வாரியம் மூலம் பனை விதை பெறப்பட்டு 50 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலப்பநாயக்கன் வலசு பஞ்சாயத்து சுந்தராடி வலசு தடுப்பணையை சுற்றிலும் மண் அரிப்பை தடுக்கும் பொருட்டு வேளாண்துறை சார்பில் கடந்த 2019 -20ம் ஆண்டு தடுப்பணைகளில் பனை விதை நடவு செய்யப்பட்டது.
வேளாண்மைத்துறை சார்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குன்னத்தூர் பனை வாரியம் மூலம் பனை விதை பெறப்பட்டு 50 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.
இவை தற்போது நன்கு முளைத்து இரண்டடி உயரத்தில் வளர்ந்துள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் பொன்னுசாமி, வேளாண் அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.