உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

விபத்தை தடுத்து பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-01-05 10:11 GMT   |   Update On 2022-01-05 10:11 GMT
தமிழக அரசு பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தை தடுத்து பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை.

உயிர்ப்போக வாய்ப்புண்டு எனத்தெரிந்தும் அஜாக்கிரதையாக பட்டாசுத் தொழிலை நடத்துவதும், தொழிலில் ஈடுபடுவதும் சரியில்லை.

எனவே தமிழக அரசு, இனியும் பட்டாசுத் தயாரிக்கும் ஆலைகளில் பட்டாசுத் தயாரிக்கும் வேளையிலும், பட்டாசுத் தயாரிக்காமல் இருக்கின்ற வேளையிலும் எவ்வித விபத்தும் நடைபெறாமல் இருக்க உரிய தொடர் நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News