உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பெரியபாளையம் அருகே அறுந்துகிடந்த மின்வயரை மிதித்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 60). விவசாயி.
இவர் தனது வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது மனைவி ராணி வயல்வெளிக்கு சென்று பார்த்த போது கணவர் குணசேகரன் அங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் மின்சார வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் குணசேகரன் மிதித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 60). விவசாயி.
இவர் தனது வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது மனைவி ராணி வயல்வெளிக்கு சென்று பார்த்த போது கணவர் குணசேகரன் அங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் மின்சார வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் குணசேகரன் மிதித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.