உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நொய்யல் அருகே ரெயில் மோதி பெண் பலி

Published On 2022-01-03 12:31 GMT   |   Update On 2022-01-03 12:31 GMT
நொய்யல் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது ரெயில் மோதி பட்டதாரி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் விஷாலி (வயது 26)பட்டதாரியான இவர் நேற்று வழக்கம்போல் சேமங்கி ரெயில்வே தண்டவாளம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பகல் 12 மணி அளவில் கோயபுத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விஷாலி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஷாலி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டமங்கலம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கரூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விஷாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News