உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் ரூ.63 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பு, வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.
திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 219 விவசாயிகள் கலந்து கொண்டு 77ஆயிரத்து 843 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியை சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.95.10க்கும், குறைந்தபட்சம் ரூ.62 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 63லட்சத்து 85ஆயிரத்து 395க்கு வணிகம் நடைபெற்றது.