உள்ளூர் செய்திகள்
வீரபாண்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
வீரபாண்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தேனி:
தேனி அருகே வீரபாண்டி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.