உள்ளூர் செய்திகள்
வழிப்பாதையில் மண் கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பால் பரபரப்பு

Published On 2021-12-28 09:13 GMT   |   Update On 2021-12-28 09:13 GMT
வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வோர் மீது புகார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் ரெயில் தோட்டம் என்ற இடம் அருகே வழிப்பாதை உள்ளது. இருசக்கர வாகனங்கள்,  கார் உள்ளிட்டவை சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று வழிப்பாதையில் மண் கொட்டப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஊராட்சித்தலைவர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். 

பின்னர் வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வோர் மீது புகார் செய்யப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News