ஊட்டி அருகே மின்தடையை சரிசெய்வதாக கூறி டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி மின்சாரம் தாக்கி பலி
பதிவு: டிசம்பர் 27, 2021 08:18 IST
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி, கெந்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). விவசாயி. இவருக்கு மின்சாரம் பழுதுபார்க்கும் பணிகளும் தெரியும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை கிராமத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பழுதுபார்க்க, மின்வாரிய ஊழியர்கள் வர தாமதமாகும் எனவும் பண்டிகை நேரம் என்பதால் நானே மின்தடையை சரி செய்கிறேன் என கூறி விட்டு அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது அவர் ஏறியதாக தெரிகிறது. ஆனால் அவர் அங்கு அமர்ந்திருக்கும் போதே திடீரென மின்சார வினியோகம் சீராகியுள்ளது.
இதன் காரணமாக அவரை மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஊட்டி போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.