உள்ளூர் செய்திகள்
கடன் தொல்லையால் புரோக்கர் தீக்குளித்து தற்கொலை
பணகுடியில் புரோக்கர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
பணகுடியை சேர்ந்தவர் சிலுவைகுமார்(வயது 55). செங்கல் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
சிலுவை குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் பணகுடி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். சிலுவைகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பணகுடியை சேர்ந்தவர் சிலுவைகுமார்(வயது 55). செங்கல் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
சிலுவை குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் பணகுடி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். சிலுவைகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.