உள்ளூர் செய்திகள்
செல்போன் பறிப்பு

அயனாவரத்தில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

Published On 2021-12-26 04:45 GMT   |   Update On 2021-12-26 04:45 GMT
அயனாவரம் அருகே வாலிபரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரம்:

சென்னை அயனாவரம் கேகே நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 18 இவர் டெக்கரேஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

கொன்னூர் நெடுஞ்சால அருகே இன்று காலை 5.30  மணி அளவில் டீ குடிக்க சென்றார் .அப் போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரண்டு பேர் கணேசின் செல்போனை  பறித்துச் சென்றனர். இது பற்றி அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News