உள்ளூர் செய்திகள்
கைது

திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2021-12-25 12:15 GMT   |   Update On 2021-12-25 12:15 GMT
திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் அதிகமாக மணல் திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு அடிக்கடி தகவல் வந்து கொண்டே இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதை தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று இரவு கொள்ளிடம் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. பின்னர் போலீசார் அதனை வழிமறித்து பார்த்த போது அதில் திருடடு தனமாக மணல் திருடி வந்தது. தெரியவந்தது. 

பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் வாகனத்தில் இருந்த மேலூர் பகுதியைச் சேர்ந்த மாசி (வயது39), முகேஸ் (28) என்ற இவருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News