உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளம் நான்கு வழி சாலையில் கான்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி மும்முரம்
விளை நிலங்களுக்கு மத்தியில், 10 அடி உயரத்திற்கு கிராவல் மண் கொட்டப்பட்டு கனரக எந்திரங்களைப் பயன்படுத்தி சமன் செய்யப்படுகிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா மைவாடி, வேடபட்டி, கழுகரை உள்ளிட்ட கிராமப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்கு மத்தியில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளன. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை செல்லும் நான்கு வழிச்சாலை ரூ.3,649 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம் நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கிராமங்களின் ஓரங்களில் வாகனங்கள் பயணிக்கும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் வடக்கு திசையில் இந்த நான்கு வழிச்சாலை கட்டமைக்கப்படுகிறது.
இதற்காக விளை நிலங்களுக்கு மத்தியில், 10 அடி உயரத்திற்கு கிராவல் மண் கொட்டப்பட்டு கனரக எந்திரங்களைப் பயன்படுத்தி சமன் செய்யப்படுகிறது.
வேடபட்டி உள்ளிட்ட சில பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரோட்டின் வாகன பயன்பாட்டு எல்லைகளை அளவீடு செய்து டிவைடர்கள், ரெடிமேட் கான்கிரீட் பொருத்தும் பணி தற்போது நடக்கிறது.