உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-23 10:01 GMT   |   Update On 2021-12-23 10:01 GMT
முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
அவினாசி:

கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

மேலும் காளிப்பாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 1 மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News