உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 82 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி -அமைச்சர் தகவல்

Published On 2021-12-22 14:33 GMT   |   Update On 2021-12-22 14:33 GMT
தமிழகத்தில் 82 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா அறிகுறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் உயர் அபாயம் மற்றும் அபாயமற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதனை செய்ததில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82 பேருக்கு எஸ் வகை மரபு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே, இவர்களது மாதிரிகள் பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன். நாளைக்குள் முடிவுகள் வெளியாகும்.

இதுவரை 13 பேரின் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேருக்கு டெல்டா வகையும், 4 பேருக்கு பட்டியலிடப்படாத வகை எனவும் முடிவுகள் வந்துள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tags:    

Similar News