உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி பெண் பலி

Published On 2021-12-21 08:11 GMT   |   Update On 2021-12-21 08:11 GMT
ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே யார்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News