உள்ளூர் செய்திகள்
சக்திவாய்ந்த முதலமைச்சரே... பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ஆளுநர்
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை:
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘சக்திவாய்ந்த முதலமைச்சரே...’ என்று உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கொரோனா புதுப்புது வகையில் வந்து கொண்டிருப்பதால், நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.