உள்ளூர் செய்திகள்
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்பு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் - சீமான் தகவல்

Published On 2021-12-19 14:35 GMT   |   Update On 2021-12-19 14:35 GMT
தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடலையும் பாட வேண்டும் என்று பா.ஜ.க. சொன்னால் அதை பாராட்ட வேண்டும் என்று நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை சின்னபோரூர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி விடுவோம். தமிழ்த்தாய் வாழ்த்து இந்த பாடலாக இருக்காது. வேறொரு பாடல் இருக்கும்.  தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடலையும் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. சொன்னால் அதை பாராட்ட வேண்டும்.  தமிழ் புத்தாண்டு போலவே தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒவ்வொரு ஆட்சியின்போதும் மாறி மாறி வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு சீமான் தமது பேச்சின் போது குறிப்பிட்டார்.

Tags:    

Similar News