உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் இளம்பெண் கற்பழித்துக்கொலை
இன்ஸ்பெக்டர்கள் தாராபுரம் மணிகண்டன், மூலனூர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தச்சன்புதூர் ரோடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் காலி வீட்டுமனைகள் உள்ளது.இங்கு இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ் பெக்டர்கள் தாராபுரம் மணிகண்டன், மூலனூர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்துகிடந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கற்பழித்துகொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பெண்ணை அங்கு தரதரவென்று இழுத்து வந்துள்ள தடயங்கள் இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஊர், பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்தும், அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.