உள்ளூர் செய்திகள்
துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் துரைமுருகன் சந்திப்பு

Published On 2021-12-17 13:53 GMT   |   Update On 2021-12-17 13:53 GMT
2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளான ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றுகிறார்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றத்திற்குள் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின்னர் பொது பட்ஜெட்டும், அடுத்ததாக மானிய கோரிக்கையும் இங்கேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார்.  ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவை ஜனாதிபதிக்கு விரைந்து அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News