உள்ளூர் செய்திகள்
குடிநீர்

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

Published On 2021-12-17 10:32 GMT   |   Update On 2021-12-17 10:32 GMT
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது.

திருச்சி:

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கம்பரசம் பேட்டை தலைமை நீர்பணி நிலையம், டர்பைன்நிலை யம், பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் வநியோகம் அளிக்கும் கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை 18-ந்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் மரக்கடை, விறகு பேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாபேட்டை, கண்டோண் மெண்ட், ஜங்சன், உய்யக் கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், கருமண்டபம், காஜாமலை காலனி, ராம்ஜிநகர்,பிராட்டியூர், எ.புதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், பிராட்டியூர் காவேரிநகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News