உள்ளூர் செய்திகள்
சுப்ரீம் கோர்ட்,

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து: மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2021-12-15 23:10 GMT   |   Update On 2021-12-16 02:03 GMT
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து இந்த மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ‘ரிட்’ மனுக்களை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News