உள்ளூர் செய்திகள்
கைது

நாசரேத் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2021-12-15 11:09 GMT   |   Update On 2021-12-15 11:09 GMT
நாசரேத் பகுதியில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாசரேத்:

நாசரேத் பகுதியில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டரை போலீசார் கைப்பற்றி, அதற்கு உடந்தையாக இருந்த வைத்தியலிங்கபுரம் சுந்தர் (21), அம்பலச்சேரியைச் சேர்ந்த மனோகர் (25), சுடலைகண்ணு (21) ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News